புதன், 12 டிசம்பர், 2012

மீண்ட காதல்


நூலருந்த பட்டம் மீண்டும் கையில் அகப்பட்ட மகிழ்ச்சி சில நாளாக.
வாழ் நாளெல்லாம் நான் வடித்த கண்ணீருக்கு இறைவன் தந்த பரிசாக.

வியாழன், 6 டிசம்பர், 2012

லைஃப் ஆஃப் நாய் (இது ஒரு நாயின் கதை)


அழகிய வீடு, அதில் ஒரு அழகிய குடும்பம், அந்த குடும்பத்தில் ஒரு அழகிய தேவதை. அந்த தேவதைக்கு இளகிய மனம்.

புதன், 17 அக்டோபர், 2012

புலம்பல்கள் 17/10/2012

ராமர் பாலம்.

 

சேது சமுத்திர திட்டத்திற்க்கு எதிராக சுப்ரமணிய சுவாமி தொடர்ந்திருந்த வழக்கில், இத்திட்டத்தை கைவிடுமாறும், ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கும் படியும், தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

கௌரவம்

ஊருக்கு நடுவே அமைந்திருந்த ஆலமர கோர்ட் கூட்டிப்பெருக்கி ஜமுக்காளம் விரித்து மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கு வீடு நாற்காலி, பெஞ்ச்செல்லாம் சேகரித்து முக்கியஸ்தர்கள் உக்கார போடப்பட்டிருந்தது. மிராசு வருகையை எதிர்பார்த்து கூட்டம் ஒருபுறமாக நின்று கொண்டிருந்தது.


செவ்வாய், 9 அக்டோபர், 2012

பாவ மன்னிப்பு

நகரத்தின் மத்தியில் அமைந்திருக்கும் லிட்டில் ஃப்ளவர் பள்ளி திங்கள் கிழமைக்கான பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது. பணக்கார பிள்ளைகள் கார்களிலும், நடுத்தரவர்கம் ஆட்டோ மற்றும் வேன்களிலும், ஏழைவர்கம் பள்ளி பேருந்து மற்றும் மிதிவண்டிகளிலும் வந்து இறங்கிய வண்ணம் இருந்தனர். பள்ளியின் தாளாளர் ஃபாதர் இமானுவேல் பள்ளியின் முதல் தளத்திலிருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார். பள்ளியின் பேருந்து நிறுத்தும் இடத்திலிருந்து இன்சார்ஜ் தேவசகாயம் வேக வேகமாக, ஃபாதரை நோக்கி வந்தார்.

புலம்பல்கள் 09/10/2012

சேனல் யுத்தம்.

பழங்கஞ்சியாய் ஆறிப்போய் கிடந்த நித்தியானந்தா செய்தி மீண்டும் சேனல்களால் சூடுபடுத்தப்பட்டு பரிமாறப்பட்டுள்ளது. கேப்டன் நியூஸ் செய்தி சேனல் ஆரம்பித்து ஓரிரு மாதங்கள் ஆகியிருந்தாலும் பெரியளவில் பேசப்படாததால், முட்டி மோதி யோசித்து மக்களுக்கான அதி முக்கிய செய்தியான  நித்தி பராக்கிரமங்களை களமிரக்கியது கேப்டன் நியூஸ் சேனல்.

வியாழன், 20 செப்டம்பர், 2012

பிறந்த நாள் ஞாபகம்

கற்பகம் என்ஜினியரிங் ஒர்க்ஸ் முழுதும் இரும்பு அடிக்கும் ஓசையும், வெல்டிங் செய்யும் இரைச்சலுமாய் காதை கிழித்துக் கொண்டு இருந்தது.
டிரிங்...டிரிங்... தொலை பேசி அழைப்பு மணி ஒலித்தது.

தொலைப்பேசியை எடுத்த சூப்பர்வைசர் தியாகு, அறிவு உனக்கு போன்... என கடுப்புடன் கத்தினார். யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டே வந்து போனை வாங்கி ஹலோ... யார் வேணுங்க..? என்றான்.

புதன், 19 செப்டம்பர், 2012

புலம்பல்கள் - 19/09/2012

 

விலைவாசி.


இன்று முழு முதற்கடவுள் விநாயகனுக்கு பொறந்த நாள், மனிதர்களை போல் கேக் வைத்து கொண்டாட கூடாது என்ற வீட்டம்மாவின் அன்புக் கட்டளை காரணமாக, பிள்ளையாருக்கு பிடித்தமான அயிட்டங்கள் வாங்க கடைக்கு சென்றேன். ஒவ்வொரு பொருட்களின் விலையையும் கேட்ட பின், நம்மை போன்ற மிடில் கிளாஸ் மாதவன்களுக்கு பிறந்த நாள் கொண்டாடங்கள் தேவையா என்ற எண்ணம் வந்தது. ஆனாலும் கடைகளில் கூட்டம் அலை

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

மனசுக்கு பிடிச்ச வேலை

 ஆறு வருடங்களுக்கு பிறகு ஒரு இனிய மாலை பொழுதில் நான் பிறந்து வளர்ந்த ஊர் வந்து இறங்கியாச்சு. திருச்சிதானா இது... பெரிய பெரிய கட்டிடங்கள்..., புதிது புதிதான போக்குவரத்து சிக்னல்கள்..., நிறைய ஒரு

புதன், 12 செப்டம்பர், 2012

ஒரு லட்சம் முதலீடு

மாறனுக்கு ஒன்றும் புரியவில்லை. மூன்று லட்சத்திற்க்கு எங்கே போவது...? வியாபாரத்தை  இழுத்து மூடியாயிற்று, மிச்சம் மீதியாக கையில் உள்ளது ஒரு லட்சம் மட்டுமே. குடும்ப பாரம் சுமக்க இயலாதவாறு அழுத்துகிறது. அரசு வேலைக்காக முற்ச்சித்தால் மூன்று லட்சம் கையூட்டாக கேட்கிறார்கள்...

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

கூடங்குளம் - மக்களாட்சியின் வெற்றி

மீண்டும் பரபரப்பாக மாறியிருக்கிறது கூடங்குளம். கடந்த வாரம் கூடங்குளம் மக்கள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இதை தொடர்ந்து மீண்டும் மக்கள் போராட்டம் ஆரம்பமானது. இம்முறை மக்களுடன் பல்வேறு மீனவ அமைப்புகளும் இணைந்து ஆரம்பித்த போராட்டம் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று ஒரு உரிழப்புடன் ஓய்ந்திருக்கிறது.

சனி, 8 செப்டம்பர், 2012

ஜட்ஜஸ் ஒரு பார்வை - II

எந்த ஒரு பதவிக்கும், இந்தளவு படிப்பு இத்தனை வருட அனுபவம் என்ற அளவுகோல் உண்டு, அது போல் இந்த போட்டியின் ஜட்ஜஸாக வர என்ன அளவுகோல்? - ”பணம்” தான். ஆம் ஒரு சேனலால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அது தான் அந்தந்த சேனலுக்கான நடுவர்களின் அளவுகோல்.

ஜட்ஜஸ் ஒரு பார்வை - I

எனக்கு ஓரளவு விபரம் தெரிய ஆரம்பித்த காலத்தில்தான் டி.வி. என்ற ஒரு வஸ்து எங்கள் ஊரில் அறிமுகமானது. இந்திரகாந்தி இறந்த பொழுது எங்கள் தெருவில் ஒரே ஒரு வீட்டில் மட்டுமே டி.வி இருந்தது. அதுவும் கருப்பு வெள்ளை. அந்த வீட்டில் இருந்தவர் முற்றத்தில் டி.வி வைத்து பிரதமரின் உடல் தகனத்தை அனைவரும் காண செய்தார். காலம் உருண்டோட ஒவ்வொரு வீடுகளிலும் டி.வி. முளைக்க தொடங்கியது.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

குழந்தைகளுக்கு எமனாகும் ஆசிரியர்கள்

சிறுவயதில் நான் அதிகம் சேட்டை செய்வதுண்டு, வாரம் ஒருமுறையாவது என் பள்ளிக்கு என் அப்பா வந்து செல்வார். ஒருமுறை என் நண்பன் மீதிருந்த கோபத்தில் காம்பஸ் எடுத்து, அவன் சைக்கிள் டயரை பல முறை குத்திவிட்டேன். ஆனால் அடுத்த நாள்தான் தெரிந்தது நான் பஞ்சர் செய்த டயர்

வியாழன், 6 செப்டம்பர், 2012

புலம்பல்கள் - 06/09/2012 பெண்கள் வா....ரம்.

சஹானாஸ்

 

தமிழ்நாட்டில் உச்சரிக்கப்படும் ஒரு கிளு கிளு உச்சாடனமாக மாறியிருக்கிறது சஹானாஸ் என்ற பெயர். 50 திருமணங்களுக்கு மேல் செய்ததாக நாளேடுகளால் தீனியாக்கப்பட்ட சஹானாஸ், தான் வெறும் நான்கு திருமணங்கள் மட்டுமே செய்ததாக புலம்பியிருக்கிறார். பாரதத்து கதாநாயகியை விட குறைவாக திருமணம் செய்த தன்னை வில்லியாக இந்த சமூகம் நோக்குவதை எண்ணி வேதனைப்படுவது அவர் முகத்திலேயே தெரிகிறது.

புதன், 5 செப்டம்பர், 2012

சிங்களர்கள் விரட்டியடிப்பு - ஈழம் கிடைத்தது...?

வேளாங்கண்ணி வந்திருந்த சிங்கள பயணிகள் விரட்டியடிப்பு என்பது தமிழக நாளேடுகளின் சூடான செய்தி. முதல் பக்க செய்தியாக ஏறத்தாழ அனைத்து தமிழ் ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. மக்களின் இந்த ஒற்றுமை கண்டு

புதன், 22 ஆகஸ்ட், 2012

உதவி தேவை...? !!!

நான் முகநூலில் ( face book ) மேய்ந்து கொண்டிருந்த பொழுது என் நன்பர் பகிர்ந்த ( share ) உதவி தேவை என்ற செய்தி படம் என் கண்ணில் பட்டது.


அதில் ஒரு மருத்துவமனையில் உள்ள குழந்தையின் படம் மற்றும் ஏன் என்ற காரணம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் இதனை பகிரும் பொழுது முகநூலில் உள்ள நிறுவனங்கள் அந்த குழந்தையின் மருத்துவ செலவுக்காக ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நானும் பல முறை இது போன்ற செய்திகளை பகிர்ந்திருக்கிறேன். காரணம் நம்மால் பண உதவி ஏதும் செய்ய முடியாவிட்டாலும், ஒரு கிளிக் -ல் அந்த குழந்தைக்கு கிடைக்க இருக்கும் உதவியை ஏன் நிராகரிக்க வேண்டும் என்ற எண்ணம்தான். முகநூலில் உள்ள பெரும்பாலானவர்கள் அதனால்தான் இது போன்ற விளம்பரங்களை தன் நன்பர்களுக்கு பகிர்கிறார்கள்.
 

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

சென்னையில் சாவுக்கூத்து

 சமீபத்தில் ஒரு ஊர்வலத்தை காண நேரிட்டது. இது விழா காலமாதலால் ஏதோ சாமி ஊர்வலம் என்று நினைத்த எனக்கு அருகில் வரும்போதுதான் அது பிண ஊர்வலம் என்று தெரிந்தது, சென்னையை பொறுத்தவரையில் சாமி ஊர்வலமாக இருந்தாலும் சாவு ஊர்வலமாக இருந்தாலும் தாரை தப்பட்டைதான் இசை. எங்கள் ஊரில், நான் கண்டவரை சாமி ஊர்வலத்திற்க்கு மேள தாளம், நாதஸ்வரம் மட்டுமே பயன் படுத்த பட்டது (இப்போது எப்படி என்று தெரியவில்லை).

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

ஜோதிடம் ஒரு பார்வை


எனக்கு எப்படி இப்படி ஒரு போதை தலைக்கேறியது என்று தெரியவில்லை...! இது ஒவ்வொருவருக்கும் மரபு வழியாக ஏற்றப்படுவதாக உணர்கிறேன். படித்து வேலைக்கு வரும் வரை இந்த போதை என்னை தீண்டியதில்லை. ஆனால் ஒரு இனிய காலை பொழுதில் என் திருமண பேச்சை அப்பா ஆரம்பிக்கும் போதுதான் முதன் முறையாக அதை உணர்ந்தேன். ஆம் அன்றுதான் அப்பா சில ஜாதகங்களை எடுத்துக்கொண்டு ஜோதிடர்களை

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

புலம்பல்கள் - 16/08/2012

அவலம்

டெல்லியில், பள்ளி பேருந்து ஜன்னலில் எட்டிப்பார்த்ததால், தந்தி கம்பத்தில் தலை மோதி மாணவன் உயிரிழந்தான். இனி பள்ளி பேருந்து ஜன்னல்களுக்கு வலை அமைக்க அரசு உத்தரவிடலாம். அதுவும் சில நாட்களுக்கு கடைபிடிக்கப்படலாம். பின்பு அடுத்த விபத்து நேரும்வரை எவரும் அதை பற்றி கவலைப்படப் போவதில்லை. அரசு உத்தரவிடுவதோடு சரி மீண்டும் நடக்காமல் இருக்க எந்த உத்தரவாதமும் இல்லை, அது எந்த மாநிலமாக இருந்தாலும். அதிகாரிகளுக்கும் எவ்வித அக்கரையும் இல்லை ஏனென்றால் அவர்களை யாரும் தண்டித்ததாக வரலாறு புவியியல் இல்லை. நமக்கும் எதிர்த்துக் கேட்கும் துணிவு இல்லை.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

கானக்குயில்கள் - 2 : நான்சி அஜ்ரம்

கானக்குயில்கள் பகுதியை துவங்க முடிவுசெய்தவுடன் முதலில் எனக்கு நினைவில் வந்தது அரபு தேசத்து கானக்குயில் நான்சி அஜ்ரம். நான்சி அஜ்ரம் எனக்கு அறிமுகமானது 2004 ஆம் ஆண்டு. ஒரு நாள் வழக்கம் போல் வெட்டியாய் வலையை மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் பட்ட கான சரஸ்வதி. அன்று அருகில் இருந்த அனைவரையும் அழைத்து காட்டி ஒரே நாளில் பேக்கு என்று பெயரெடுத்தவன் நான். அவளோ உருது-ல பாடுறா, எல்லாம் புரிஞ்ச மாதிரி, எல்லாரையும் கூப்பிட்டு காட்டுற... என் நன்பன் கேட்டான். ம்...ஹூம்.. கழுதைக்கு தெரியுமா கற்பூர நறுமணம்.

கானக்குயில்கள் -1







எதையவது எழுத வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டு ஆரம்பித்த வலைத்தளம் இது. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக எதை எழுதுவது என்று தெரியாமல் அப்படியே வைத்திருந்து ஒரு வழியாக மூன்று நாட்களாக எதையோ கிறுக்கியாயிற்று. மீண்டும் பழையபடி சரக்கு எதுவும் இல்லாததால் எதை எழுதுவது என்று தலையை பிய்த்துக் கொண்டு படுத்ததில் இசையை பற்றி எழுத, கனவில் வந்த தேவதை சொன்னது. எனக்குத்தான் இசையை பற்றி எதுவும் தெரியாதே என்றேன். கவலைப் படாதே இசைக்கு மொழி கிடையாது என்றது. இருந்தாலும் கவலையில்லை எனக்குத்தான் தமிழ் தவிர எதுவும் தெரியாதே என்றேன். அதிகமா பேசுற நீ... அதிகமா பேசுற நீ... என்றபடி பறந்தது. ஃபிகரை பறி கொடுத்த வேதனையில் எழுந்த எனக்கு, சட்டென தோன்றியது ஐடியா ! பேசாம உலக இசை குயில்களை பற்றி எழுதினால் என்ன? முடிவெடுத்து விட்டேன்! விரைவில் வருகிறேன்- குயில்களோடு . 

 


அன்புடன்
முத்துக் குமரன்.

நன்றி
பட உதவி : கூகுள்

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

இயற்கையை இழந்து நின்றோம்

வயல்கள் ப்ளாட்டாக மாறி வருகுது.
உலகின் வெப்பமோ ஏறி வருகுது.

சிறுவயதில் ஏறி விளையாடிய மரங்கள் இன்று இல்லை.
மரங்களில் குதித்து ஓடிய அணில்கள் இன்று இல்லை.

சனி, 11 ஆகஸ்ட், 2012

பெண்ணென்றால் கருணை

வாழ்வின் இருள் படர்ந்த நாட்கள் - அடுத்து என்ன செய்வது என்று தெரியாத பொழுதுகள். பலத்த சிந்தனையுடன் கடற்கரை மணலில் நான். சற்று இடைவெளியில் இளம் காதலர்கள்.

அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தான், பேசி முடிந்து நடக்க எழுந்தான்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

ஆடி கொண்டாட்டம்

ஆடி மாதம் - விவசாயிகளின் பொன்னான மாதம். கிராமங்கள்தோரும் ஆடிப்பட்டத்தை தேடி விதைத்துவிட்டு, ஏக்கத்துடன் வானம் பார்த்து கண்ணீர் மழை விட்டு, மழையை எதிர்ப்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு, வருண பகவான் மனமிரங்கி சிறிது சிறிதாக கருனை மழையை கா(கொ)ட்ட துவங்கிருக்கிறார். அதனால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம்.